கூடங்குளம் அணு மின் நிலைய பணியை நிறுத்தமாறு மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை: கூடங்குளம் அணுமின் நிலைய பணியை உடனே நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய அணுமின் நிலையத்தை மத்திய அரசு அமைத்து வருகிறது.

இந்த அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலவறையற்ற உண்ணாவிரதரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாற்று வசிப்பிடம், இழப்பீடு, தொழில் வேலை வாய்ப்பு, பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற எந்த முன் நடவடிக்கையும் எடுக்காமல் அணு உற்பத்தியை தொடங்க நினைப்பது தவறான நடவடிக்கையாகும்.

எனவே, கூடங்குளம் அணுமின் பணியை உடனே நிறுத்தி வைத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+