உள்ளாட்சித் தேர்தலில் காங்- தேமுதிக கூட்டணிக்கு தீவிர முயற்சி!

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறி காங்கிரஸை வெட்டிவிட்டுவிட்டது திமுக.
இந் நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் மாநிலத் தலைவரான தங்கபாலு,
இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எடுக்க வேண்டிய நிலை பற்றி ஆராயப்பட்டு அகில இந்திய தலைமைக்கும் தெரிவித்து, அவர்கள் ஒப்புதலுடன் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்ற முடிவை அறிவிக்கிறோம். இந்த தேர்தலுக்காக மாநில, மாவட்ட தேர்தல் குழுக்கள் அமைக்கப்படும்.
18ம் தேதி முதல் 20ம் தேதி வரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படும். மாவட்ட குழுக்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்களை மாநில குழுவுக்கு அனுப்பும். மாநில குழு வேட்பாளர்களை அறிவிக்கும்.
காங்கிரஸ் கட்சி அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிட்டு வெற்றியை பெற மத்திய அரசின் சாதனைகளையும், அதனால் தமிழகம் பெற்ற பலன்களையும் எடுத்துக் கூறி மக்களின் ஆதரவை பெற வேண்டும். இதற்கு காங்கிரசார் முழுமூச்சுடன் பாடுபட வேண்டும்.
நாங்கள் தனித்து போட்டியிட எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் எடுக்கப்படும் முடிவு அந்தந்த சூழலில் எடுக்கப்படுவது. கூட்டணி என்பது நிரந்தரமல்ல. இதில் எந்த குழப்பமும் இல்லை.
மத்திய அளவில் தி.மு.கவுடனான கூட்டணி தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் கூட்டணி தர்மப்படி தி.மு.க. போட்டியிட்ட தொகுதி என்பதால் அவர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறோம் என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் தேமுதிகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா? என்று கேட்டதற்கு, இன்னும் வருகிற நாட்களில் ஏற்படும் நிலைமைகளை அனுசரித்து தேவையான, உகந்த முடிவுகளை சூழ்நிலைக்கு ஏற்ப எடுப்போம் என்றார் தங்கபாலு.
இந் நிலையில் காங்கிரஸ் தரப்பில் சில முக்கிய பிரமுகர்கள் தேமுதிகவுடன் பேசி வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-தேமுதிக கூட்டணிக்கு தீவிர முயற்சிகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனக்குத் தெரியாது-இளங்கோவன்:
இதற்கிடையே அதிமுக ஆதரவு நிலை கொண்ட மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும்?
பதில்: திமுகவுடன் இருந்து பெறும் வெற்றியை விட பெரிய வெற்றி காங்கிரசுக்கு கிடைக்கும். ஒன்றிரண்டு மாநகராட்சிகள், 10 நகராட்சிகளை காங்கிரஸ் கட்சி பிடிக்கும்.
கேள்வி: எதிர்காலத்தில் மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?
பதில்: எதிர்காலத்திலும் திமுகவுடன் கூட்டணி இருக்க கூடாது என்று தான் நாங்களும், காங்கிரஸ் தொண்டர்களும் விரும்புகிறோம்.
கேள்வி: தேமுதிகவை காங்கிரசுடன் சேர்க்க முயற்சி நடக்கிறதா?
பதில்: அப்படி ஏதும் முயற்சி நடப்பதாக எனக்கு தெரியவில்லை.
கேள்வி: உள்ளாட்சி தேர்தல் பிரச்சார வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகம், தீவிரவாத எதிர்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து தமிழக தலைவர்கள் ஒருங்கிணைந்து பிரச்சாரம் செய்வோம். ராகுல் காந்தியையும் பிரச்சாரத்துக்கு அழைப்போம் என்றார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications