கே.என்.நேரு, சகோதரர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்!
திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரது சகோதரர்கள் ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரது வங்கிக் கணக்குகளை லஞ்ச ஒழிப்புப் போலீசார் முடக்கியுள்ளனர்.
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று கே.என்.நேரு, வீடு, அவரது சகோதரர்கள் ராமஜெயம், மணிவண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரது வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதே போல திருப்பூர் அசினாசி சடையம்பாளையத்தில் உள்ள நேருவின் நண்பர் ரவிச்சந்திரன் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்தது.
மொத்தத்தில் சென்னை, திருச்சி, கோவை பகுதிகளில் 14 இடங்களில் சோதனைகள் நடந்தன.
இந் நிலையில் நேரு, மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினரின் வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications