திருச்செந்தூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி பஸ் எரிப்பு: மர்ம கும்பல் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உடன்குடியிலிருந்து திருச்செந்தூருக்கு நேற்று இரவு 8.50 மணிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருசசெந்தூர் அருகே ஆழந்தாழை என்ற இடத்தில் சென்றபோது 7 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்தது. பேருந்து முன்பு தடிகளைப் போட்டு மறித்தது. இதனால் பயந்து போன டிரைவர் பேருந்தை நிறுத்தினார். அந்த கும்பல் பேருந்துக்குள் சென்று அரிவாளை காட்டி டிரைவரை மிரட்டியது. டிரைவர், கண்டக்டர், பயணிகள அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.

ஆத்திரமடைந்த கும்பல் பேருந்தின் கண்ணாடி ஜன்னல்களை அரிவாளால் தட்டி நொருக்கியது. பின்னர் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதில் பேருந்து தீ்ப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறி்த்து டிரைவர் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். ஆனாலும் பேருந்தின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது.

தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி, ஆர்டிஓ பொற்கொடி, தாசில்தார் வீராசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசி பேருந்தை எரித்த 7 பேர் கொண்ட அந்த கும்பலை தேடி வருகின்றனர். கூடன்குளம் விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் பேருந்து எரிப்பு சம்பவம் இதன் எதிரொலியாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+