மதுரையை விட்டே காணாமல் போய்விட்டார் அழகிரி: அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை: அ.தி.மு.க. அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்று கொக்கரித்த மு.க.அழகிரி இப்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. மதுரையை விட்டே காணாமல் போய்விட்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரை ஓபுளாபடித்துறை எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று 3 மாதத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். இந்தியா மட்டும் அல்ல உலக தலைவர்களே பாராட்டும் வகையில் தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் நடத்தி வருகிறார்.
தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்த கூட்டம் நாட்டைவிட்டே விரட்டப்பட்டு வருகிறது. ஆன்மீக நகரமான மதுரையை தி.மு.க.வினர் அழகிரியின் தலைமையில் செய்திட்ட அட்டகாசங்கள் அனைத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கையால் இன்று ஒழிந்துவிட்டது. அதனால் தான் மதுரை மக்களால் இன்று ஒரு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் பட்டணத்தில் ஆன்மீகம் நிறைந்த மதுரை மண்ணில் ஆடியவன் யாரும் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. கடந்த 2007ம் ஆண்டு அ.தி.மு.க. அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்று கொக்கரித்த மு.க.அழகிரி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. மதுரையில் இருந்தே காணாமல் போய்விட்டார்.
இதை நான் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார். ஆடியவர்களுக்கு எல்லாம் அன்றைய தினம் முடிவு கட்டடும் என்று அப்போதே தெரிவித்தேன். அது இப்போது நடந்துவிட்டது.
தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு துறையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ததில் மட்டும் 634 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கேஸ் அடுப்புகள் வாங்கியதில் 164 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் தங்கத்திற்கு பதிலாக போலி நகைகளை வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தப்பிக்க முடியாது. ஒருநாள் உள்ளே செல்லும் காலம் விரைவில் வரும். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தேடிதந்ததை போல் உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications