குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள திமுக மாஜி எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீண்டும் கைது!

நொளம்பூர் அண்ணாமலை அவென்யூவில் ரூ. 100 கோடி மதிப்பிலான 20 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்ட அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டதையடுத்து குண்டர் சட்டத்திலும் கைதானார். வேலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜமங்கலத்தைச் சேர்ந்த ஜோசப் பெர்னாண்டஸ் என்பவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறி புகுந்து ரங்கநாதனும், அவரது ஆட்களும் ரோடு போட்டதாகவும் இதனை தட்டிக் கேட்ட தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் 448 ஐபிசி (அத்துமீறி நுழைதல்), 506(2) ஐபிசி (கொலை மிரட்டல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரங்கநாதன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வேலூர் சிறையில் இருந்து இன்று போலீசார் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications