பத்மநாப சுவாமி கோவில் நகைகளை பொது சொத்தாக அறிவிக்க வேண்டும்: மார்க்கிஸ்ட்
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை பொது சொத்தாக்க வேண்டும் என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் கேரள மக்களுக்கு உரியதாகும். இதை நாட்டின் பொது சொத்தாக அறிவிக்க வேண்டும். பத்மநாப சுவாமி கோவிலை மன்னர் குடும்பம் நிர்வகிப்பது முறையல்ல. தனியாக ஒரு கமி்ட்டி அமைத்து இக்கோவிலை நிர்வகிக்க வேண்டும். அதில் மன்னர் குடும்பத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கலாம்.
கோவிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சொத்துகளை என்ன செய்வது என்பது குறித்து ஜனநாயக முறைப்படி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இதற்கு பக்தர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும். தேவபிரச்சன்னம் நடத்தப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள் ஏற்புடையதாகும் என்றார்.












Click it and Unblock the Notifications