மீண்டும் 17000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று நல்ல ஏற்றத்துடன் முடிந்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 354 புள்ளிகள் உயர்வு கண்டு, மீண்டும் 17000 புள்ளிகளைத் தாண்டியது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 108 புள்ளிகள் உயர்வு கண்டது.
அதிகபட்சமாக டாடா கன்ஸல்டன்சி சர்வீஸ் பங்குகள் 3.94 சதவீத உயர்வு கண்டன. ஐடி துறையின் இதர நிறுவனப் பங்குகளும் லாபத்தில் கைமாறின. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 3.73 சதவீதம் உயர்ந்து அதன் மூதலீட்டாளர்களை மகிழ வைத்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17099 புள்ளிகளிலும், நிப்டி 5140 புள்ளிகளிலும் நிலைப் பெற்றது.












Click it and Unblock the Notifications