ஊழலை எதிர்த்து சுயமரியாதை யாத்திரையை துவங்கினார் பாபா ராம்தேவ்

Subscribe to Oneindia Tamil

ஜான்சி: ஊழல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த யோகா குரு பாபா ராம்தேவ் சுயமரியாதை(சுவாபிமான்) யாத்திரையை துவங்கினார்.

யோகா குரு பாபா ராம்தேவ் ஊழல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சுயமரியாதை(சுவாபிமான்) யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் இருந்து தனது யாத்திரையை இன்று துவங்கினார். அவர் 1 லட்சம் கிமீ யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார்.

இது குறித்து பாபா ராம்தேவ் கூறியதாவது,

நாட்டு மக்களிடையே ஊழல் மற்றும் கறுப்புப் பணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தான் நான் யாத்திரை மேற்கொண்டுள்ளேன். இந்த யாத்திரை வீர மங்கை ராணி லக்ஷ்மி பாய் பிறந்த இடத்தில் இருந்து புறப்பட்டு ஒரு நாள் நாடாளுமன்றத்தை சென்றடையும் என்றார்.

இந்த யாத்திரை அலகாபாத்தில் உள்ள பிரயாக் என்னும் இடத்தில் நிறைவடையும் என்று ராம்தேவ் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். யாத்திரையைத் துவங்குவதற்கு முன்பு பாபா ராம்தேவ் 2 மணி நேரம் யோகா முகாம் ஒன்றை நடத்தினார்.

ஊழலை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+