ராஜபக்சேவை தண்டிக்க, தமிழ் ஈழம் அமைக்கக் கோரி ஜெனீவாவில் தமிழர்கள் பேரணி

தமிழ் ஈழக் கொடி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படம், மூன்று தமிழர் உயிரைக் காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த இளம் பெண் செங்கொடி ஆகியோரின் புகைப்படங்களைக் கையில் ஏந்தியபடி பல ஆயிரம் தமிழர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து வந்து இவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 18வது கூட்டம் நடைபெற்ற வேளையில் நடந்த இந்தப் பிரமாண்டப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ்சைச் சேர்ந்த மேயரான ஸ்டீபன் கட்டிக்னான் கூறுகையில், எனது தொகுதியில் 30 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காகவே நான் இங்கு வந்தேன் என்றார். பேராசிரியர் ஜான் நீல்சன் என்பவர் கூறுகையில், இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை குறித்து மனித உரிமைக் கவுன்சில் விரிவாக விசாரிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் விராஜ் மெண்டிஸ். இவர் ஒரு சிங்களர் ஆவார். தமிழர்களின் மனித உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தருபவர். நீண்ட காலமாக தமிழர்களின் போராட்டத்தோடு பங்கேற்றும் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனைச் சேர்ந்த கந்தையா ராஜ மனோகரன் என்பவர் கூறுகையில்,
இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றி சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். சுதந்திர தனித்தமிழ் ஈழ விடுதலைக்காக, தாங்கள் போராடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள் இதுவரை காணாத அளவில் பெரும் திரளான தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம், ரயில், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டு வந்திருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications