திண்டுக்கல் அருகே சோதனை ரயில் கார் மீது மோதியதில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது வேகமாக வந்த சோதனை ரயில் மோதியதில் காரில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். கார் தூக்கி வீசப்பட்டு சிதைந்து போனது.
திண்டுக்கல் மார்க்கத்தில் ரயிலின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக சோதனை ரயில் ஓட்டம் நடந்தது. இதற்காக ரயிலை 125 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிப் பரிசோதித்தனர்.
அப்போது கொளஞ்சிப்பட்டி என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை ஒரு கார் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சோதனை ரயில் கார் மீது மோதி காரை தூக்கி வீசியது. அதில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications