நஞ்சை கக்குவதற்கு தொலைக்காட்சிகள் டெல்லியிலே துடித்துக் கொண்டிருக்கின்றன: வைகோ

நாஞ்சில் சம்பத் பேசுகையில் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மறைமுகமாக தாக்கினார். இதை கூட்டத்தினர் ரசித்து ஆர்ப்பரிக்க, ஜெயலலிதா பற்றி மிக அதிகமாக கமெண்ட் அடித்தபோது, வாயில் கையை வைத்து 'உஷ்' சைகை மூலம் நாஞ்சில் சம்பத்தை கட்டுப்படுத்திவிட்டார் வைகோ.
கள்ளத்தோணியில் போன நீ தான்.. பெரியார்தாசன்:
மாநாட்டில் பேராசிரியர் பெரியார்தாசன் பேசுகையில், யானை இளைத்துவிட்டது என்றால் எலி கூட கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா என்று கேட்கும்.
சிலரின் செயல்களால், சில குடும்பத்தின் செயல்களால் திராவிட இயக்கத்தைப் பற்றி புளு, பூச்சி எல்லாம் ஏளனம் செய்கிறது.
திராவிட இயக்கம் என்றால் அது மறுமலர்ச்சி திராவிட இயக்கம் மட்டும்தான். பெரியாரின் பேறறிவு வைகோவுக்குத்தான் உண்டு. அண்ணாவின் அந்த கருத்து ஆற்றல் வைகோவுக்குத்தான் உண்டு. இவர்தான் திராவிடத் தலைவன்.
கள்ளத் தோணியில் போனவன் என்று உன்னை ஏளனம் செய்தார்கள். நல்ல தோணியில் போனவன் எல்லாம் காட்டிக் கொடுக்க போனான். கள்ளத்தோணியில் போன நீ தான் (வைகோ) தான் அந்த நாட்டை கட்டிக் கொடுக்க போகிறாய்.
சும்மா வரமாட்டான் பெரியார்தாசன். என்னை கேட்டார்கள்...என்ன பெறுவதற்கு மதிமுகவிற்கு போகிறீர்கள் என்று கேட்டார்கள். தமிழினத்திற்கு மானம் தேடித்தர போகிறேன் என்று சொன்னேன்.
அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தேன். எனக்கு அறிவு இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது. உலக இலக்கியம் எல்லாம் படித்தவன். எனக்கு எதுக்கு அரசியல் என்று திமிராக இருந்தேன். திக்குவாய்க்காரன் எல்லாம் அரசியல் தலைவனாகிவிட்டதால் எனக்கு கொஞ்சம் உரைத்தது. அதனால் அரசியலுக்கு வர முடிவு செய்தேன்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்து வாதாட ராம்ஜெத்மலானி வந்தார். நான் அந்த நிகழ்வை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். மூவரின் தூக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராம்ஜெத்மலானி வந்தால் வெற்றி என்று எதிர்பார்த்ததுதான். ஆனால் இவரை யார் அழைத்து வந்திருப்பார். ரொம்ப பெரிய ஆளாச்சே. இவரை யார் அழைத்து வந்திருப்பார் என்று எனக்குள் கேள்விகள். அப்போது ராம்ஜெத்மலானியிடம் எல்லோரும் நன்றி சொல்ல, அதற்கு அவர், உங்கள் நன்றியை வைகோவுக்கு சொல்லுங்கள். அவர்தான் இதற்கு காரணம் என்றார்.
அப்போதே நான் முடிவெடுத்துவிட்டேன். இனியும் தாமதிக்கக்கூடாது. தமிழினத்திற்கு இப்படி போராடிக் கொண்டிருக்கும் தமிழனிடம் சென்றுவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications