ராமநாதபுரத்தில் 11 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த 144 போலீஸ் தடை உத்தரவு ரத்து
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராதநாதபுரத்தில் கடந்த 11 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று முதல் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியி்ல் நடந்த வன்முறை சம்பவங்களை அடுத்து, கடந்த 10 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் நடமாடவும், முக்கிய அலுவல்களுக்கு செல்லவும் கடும் சிரமப்பட்டனர். இந்த உத்தரவு குறித்து பல கட்சி மற்றும் சமூக அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் நிலவி வந்த கலவரம் நீங்கி தற்போது அமைதி திரும்பி உள்ளது. இதையடுத்து 11வது நாளான இன்று 144 தடை உத்தரவை விலக்குமாறு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications