பிரேசிலில் கொடூரம்- சிறைக்குள் கடத்தி சென்று 4 நாட்களாக கற்பழிக்கப்பட்ட சிறுமி
ரியோடிஜெனீரோ: 14 வயது சிறுமியை கடத்திச் சென்று சிறைக்குள் வைத்து நான்கு நாட்களாக கற்பழித்த கொடுமை பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.
அந்தக் கும்பலிடமிருந்து தப்பி வந்த சிறுமி இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெல்லாம் நகரில் கடந்த வாரம் இரவு ஒருநாள் போதையில் 3 சிறுமிகள் சுற்றி திரிந்துள்ளனர். இதை கண்ட போலீசார் 3 பேரையும் கைது செய்து அங்கிருந்து 26 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்துள்ளனர்.
அங்கு நடத்திய சோதனையில் 3 பேரும் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் இருந்து ஒரு சிறுமியை அதே வளாகத்தில் உள்ள சிறைக்கு கடத்திய சில கைதிகள் அவரை 4 நாளாக கற்பழித்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய அந்த சிறுமி, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், சிறைக்கு கடத்தி செல்லப்பட்ட நான் பலமுறை பலரால் கற்பழிக்கப்பட்டேன். அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பி வந்துவிட்டேன், என்றார்.
சிறுவர் சீர்த்திருத்த காப்பகத்தில் இருந்து சிறுமியை கடத்தி சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறையின் சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரிக்க மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications