சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட மயி்ல்கள் திடீரென இறந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நம் தேசிய பறவையான மயில்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. அவை விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் அவ்வப்போது வேதனை அடைந்தாலும் மயிலை துன்புறுத்தாமல் பாதுகாத்து வருகின்றனர்.
குருவிகுளம் அருகே மலைப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. இவை அனைத்தும் காலை நேரங்களில் அங்குள்ள விளை நிலங்களில் இரை தேடிச் செல்வதும், மாலையில் அப்பகுதி ஆலமரங்களில் தங்குவதும் வழக்கம். அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்கா சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
நேற்று மாலை வழக்கம்போல் உலா வந்த மயில்கள் திடீரென ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. சில நிமிடங்களில் 40க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து விழுந்தன.
இது குறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தாசில்தார் சந்திரசேகர், விஏஓ கோதண்ட ராமராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த மயில்களை பார்வையிட்டனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்பது குறித்து வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மயில்கள் இரண்டை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகே மயில்கள் இறந்தது எப்படி என தெரிய வரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications