சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.34 லட்சம் சிகரெட்கள் பறிமுதல்
தூத்துக்குடி: சிங்கப்பூரிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சென்னைக்கு கடத்த இருந்த 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சென்னைக்கு வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்க துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் துறைமுகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது சிங்கப்பூரிலிருந்து சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு வந்த கன்டெய்னர் மற்றும் அதற்குரிய ஆவணங்களை அவர்கள் சோதனையிட்டனர். அதில் சிங்கப்பூரிலிருந்து 660 பெட்டிகளில் பிஸ்கெட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் கண்டெய்னர் முழுவதையும் சோதனையிட்டனர்.
அப்போது 630 பெட்டிகளில் பிஸ்கெட்டுகளும், கடைசியாக இருந்த 30 பெட்டிகளில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தோனேசியா சிகரெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 1.83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஸ்கெட்டுகளுக்கு சுங்கவரியாக 80 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
ஆனால் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த சிகரெட்டுகளுக்கு 14 லட்சம் ரூபாய் வரை சுங்க வரி செலுத்த வேண்டும் என்பதால் பிஸ்கெட் பெட்டிகளுடன் இவை கடத்தப்பட்டு வந்தது தெரிந்தது. சிகரெட் பெட்டிகளை பறிமுதல் அதிகாரிகள், சென்னையை சேர்ந்த இறக்குமதி நிறுவனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications