தேமுதிகவுக்கு தலித்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது- மேலும் ஒரு ஊரில் கட்சி கலைப்பு
ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேசிய விதம், கட்சித் தலைவர் விஜயகாந்த், பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராதது ஆகியவை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட தலித் மக்களிடையே தேமுதிகவுக்கு கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் ஒரு ஊரில் கட்சியைக் கலைத்து விட்டனர் தேமுதிகவைச் சேர்ந்த தலித் மக்கள்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை தேவையில்லை என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியிருப்பது தமிழகம் முழுவதும் உள்ள தலித் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூற முன்வரவில்லை. காயமடைந்தவர்களை மட்டும் பார்த்து விட்டு அவர் பரமக்குடி வராமல் போய் விட்டார்.
இதனால் தேமுதிகவைச் சேர்ந்த தலித் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள். விஜயகாந்த்தையும், பண்ருட்டியையும் கண்டித்து காரனேந்தல் என்ற கிராமத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தேமுதிகவினர் ஒன்று கூடி கட்சிக் கொடி, வேட்டிகள், உறுப்பினர் அட்டைகளை தீவைத்துக் கொளுத்தினர். கட்சிக் கொடிக் கம்பத்தையும் வெட்டிச் சாய்த்தனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள வன்னிவயல் என்ற கிராமத்திலும் கட்சியைக் கலைத்து விட்டனர்,. கட்சிக் கொடிகள், உறுப்பினர் அட்டைகளை பெரும் திரளாக கூடிய தேமுதிகவினர் தீவைத்து எரித்தனர். இனிமேல் இந்தஊரில் தேமுதிகவுக்கு இடமில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு தேமுதிக சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவியை அக்குடும்பத்தினர் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications