மன்சூர் அலிகான் பட்டோடியின் இடது கண் தானமாக தரப்பட்டது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் விருப்பத்தின் பேரில், அவருக்கு இருந்த ஒரே கண்ணும் தானமாக கொடுக்கப்பட்டது.
மன்சூர் அலிகானின் வலது கண் விபத்தில் செயலிழந்து போய் விட்டது. அவர் இடது கண்ணுடன்தான் சில காலம் கிரிக்கெட் ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது இடது கண்ணை அவர் தானம் தர விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது விருப்பப்படி அவரது மரணத்திற்குப் பின்னர் பட்டோடியின் இடது கண் தானமாக தரப்பட்டது.
பட்டோடி இறக்கும் முன் தனக்கிருந்த ஒரு கண்ணையும் தானமாக அளிக்குமாறு விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவர் இறந்த பின், இடதுபக்க கண்ணை டாக்டர்கள் எடுத்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications