கைக்குழந்தை உள்ள ஆசிரியைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது: ஆசிரியர் கூட்டணி
நெல்லை: கை குழந்தைகள் உள்ள ஆசிரியைகள், மகப்பேறு உற்றோர், உடல் நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பணி கொடுக்கக் கூடாது என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராதாபுரம் வட்டார ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் திசையன்விளை ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
ராதாபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியாக மாத இறுதியில் கணக்கு வரவு வைக்க வேண்டும்.
கை குழந்தைகள் உள்ள ஆசிரியைகள், மகப்பேறு உற்றோர், உடல் நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பணி கொடுக்கக் கூடாது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications