சோனியாவிடம் உடல் நலம் விசாரிக்கத்தான் பாலு போனார்-கருணாநிதி

இது குறித்து அவர் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற கே. பி. பி. சாமி பாடுபடக்கூடாது என்பதற்காகவே அவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர். எப்பொழுதோ நடந்த ஒரு குற்றத்தை அவர் மீது பொய்யாக சுமத்தி கைது செய்திருக்கின்றனர்.
சோனியா காந்தி தோழமைக் கட்சியின் தலைவர் என்பதால் அவர் உடல் நலம் பாதித்தபோது அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி தந்தி அனுப்பினேன். அவர் சிகிச்சைக்காக அமெரி்ககா புறப்பட்டபோதும் வாழ்த்தினேன். தற்போது அவர் குணமடைந்து நல்லபடியாக நாடு திரும்பியுள்ளார்.
அதனால் தமிழன் என்ற முறையில் அவர் உடல் நலம் குறித்து விசாரிக்கத் தான் டி. ஆர். பாலுவை அனுப்பி வைத்தேன் என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறார்களே என்று கேட்டதற்கு, அதைப் பற்றி தற்போது எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.
தேர்தல் பிரச்சாரம் குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications