பிருத்வி-2 ஏவுகணையை மீண்டும் சோதித்தது இந்தியா
Subscribe to Oneindia Tamil
பலாசூர்: ஒரிசாவின் கிழக்கு பகுதியில் பிருத்வி-2 ஏவுகணையை பரிசோதிக்க பார்க்கப்பட்டதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரிசா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சண்டிப்பூர் கடற்கரை தளத்தில் இருந்து பிருத்வி-2 ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. இந்திய தயாரிப்பான பிருத்வி-2 ஏவுகணை அணுஆயுதங்களுடன் தரைப்பகுதியில் 350 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை சென்று தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை ஏற்கனவே பலமுறை பரிசோதிக்கப்பட்ட ஒன்று என்றாலும், இன்று காலை 8.50 மணிக்கு மீண்டும் பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அவ்வப்போது ஏவுகணைகளை பரிசோதித்து பார்த்து, தங்கள் திறமையை வெளிப்படுத்துவது வழக்கம்.












Click it and Unblock the Notifications