சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கித் தோட்டாவுடன் பிடிபட்ட பெண் பயணி
சென்னை: தூப்பாக்கி குண்டுடன் ஹைதராபாத் செல்ல முயன்ற பெண் பயணி சென்னை விமான நிலையத்தில் போலீசாரிடம் பிடிப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று ஹைதராபாத் செல்லும் தனியார் விமானத்தில் செல்லும் பயணிகள் சோதனைக்காக வந்தனர். அவர்களிடம் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, ஐ.டி.இன்ஜினியரான ஹக்னா ஷா தவாக் (26) என்ற பெண்ணின் பையில் துப்பாக்கி குண்டு ஒன்று வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்த போது, முன்னுபின்னாக ஹக்னா ஷா தவாக் பதிலளித்தார். அதையடுத்து அவரை விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனால் தவாக் உடன் ஹைதராபாத் செல்ல இருந்த அவரது நண்பர் ஒருவரும் தனது பயணத்தை ரத்து செய்து உடன் வந்தார். விமான நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள நண்பர் ஒருவரது திருமணத்தில் கலந்து கொண்டு மீண்டும் ஹைதராபாத் திரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் தனது பையில் சிக்கிய துப்பாக்கி குண்டு எப்படி பையில் வந்து என தெரியவில்லை என்றும் போலீசாரிடம் தவாக் தெரிவித்தார். அவரிடம் துப்பாக்கி உரிமம் எதுவும் இல்லை நிலையில், தவாக்கிடம் குண்டு மட்டும் எப்படி வந்தது என போலீசார் விசாரித்து விருகின்றனர்.












Click it and Unblock the Notifications