ப.சி. விவகாரம்: சு.சாமியின் மனுவை சிபிஐ பரிசீலிக்கும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Subscribe to Oneindia Tamil

Subramaniam Swamy and P Chidambaram
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியின் மனுவை சிபிஐ பரிசீலிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தெரிவித்தது.

2ஜி ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்தையும் விசாரிக்கக் கோரி சாமி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில்,

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் முன் முதன்முறையாக புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை சிபிஐ ஆய்வு செய்து பரிசீலிக்கும். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

அதே நேரத்தில் ப.சிதம்பரம் மீது எந்த விசாரணையும் தேவையில்லை. மேலும் இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருவதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிடவும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (Special Investigation Team) அமைக்கக் கோரி புதன்கிழமை வாதாடப் போவதாக மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். இவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் குழுவில் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+