தூத்துக்குடி:வார்டுகளைத் தேடும் வேட்பாளர்கள், வாக்குச்சாவடிகளைத் தேடும் வாக்காளர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகள் எவை, எவை, வாக்குசாவடிகள் எது என்பது குறித்து தெளிவாக அறிவிக்காததால் பொது மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் அது சரி வர தெரியாததால் பிரசாரத்திற்கு எங்கெல்லாம் செல்வது என்று தெரியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.
51 வார்டுகளுடன் செயல்பட்டு வந்த தூத்துக்குடி நகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியான பிறகு உள்ளாட்சி தேர்தலை முதன் முறையாக சந்திக்கிறது. இதற்கிடையே மாநகராட்சியின் 51 வார்டுகளை மாற்றி 60 வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேயர் மற்றும் 60 வார்டுகளுக்கான வேட்பாளர்களையும் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துவிட்டன. மதிமுகவும் மேயர் வேட்பாளரை அறிவித்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
வேட்பு மனு தாக்கல் துவங்கி தேர்தல் வேலைகள் துவங்கிவிட்ட நிலையில் தங்கள் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகள் எவை, எவை என்று கவுன்சிலர்களும், பொது மக்களும் குழம்பிப் போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications