விமானத்தில் 79வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மன்மோகன் சிங்
நியூயார்க்: இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தனது 79வது பிறந்தநாளை, விமானத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் நிருபர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று 79வது பிறந்தநாள். ஐ.நா.சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றிருந்த பிரதமர் நேற்று நாடு திரும்பினார். அப்போது பத்திரிக்கை நிருபர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு உடன் இருந்தவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பிரிக்கும் முன் தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் நகரில் பிறந்தவர் மன்மோகன் சிங். ஆனால் அவர் பிறந்த தேதி சரியாக தெரியாது. அவரது பெற்றோர் பள்ளியில் அளித்த தேதியை தான் ஆண்டுத் தோறும் தனது பிறந்தநாளாக கொண்டாடி வருகிறார். பிரதமர் தனது பிறந்தநாளை விமானத்தில் கொண்டாவது இது முதல் முறை அல்ல. அதற்கு முன் 3 முறை இதேபோல கொண்டாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications