சீர்காழி அருகே நகை வியாபாரியிடம் இருந்து ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12.5 கிலோ தங்கம் கொள்ளை
மயிலாடுதுறை: சீர்காழியில் நகை வியாபாரியிடம் இருந்து ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12.5 கிலோ தங்கக் கட்டிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தங்க நகை வியாபாரி பவன் குமார் ஜெயின் சென்னையில் 12.5 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கியுள்ளார். பின்னர் தனது காரில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்றிரவு 1.30 மணி அளவில் அவரது கார் சீர்காழி அருகே உள்ள பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருக்கையில் பாதரக்குடி என்னும் ஊரில் அவரைப் பின்தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்கள் வந்துள்ளது. அவற்றில் 4 பேர் இருந்துள்ளனர்.
பின்தொடர்ந்தவர்கள் திடீர் என்று காரை வழிமறுத்துள்ளனர். பவன் குமாரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12.5 கிலோ தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சீர்காழியி்ல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications