அசன் அலி கறுப்புப் பண பதுக்கல்: 4 நாடுகளில் தனிப்படை விசாரணை
Subscribe to Oneindia Tamil

மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த தொழில் அதிபர் அசன் அலிகான். இவர் வெளிநாட்டு வங்கிகளில் பல ஆயிரம் கோடி பணம் பதுக்கி வைத்திருப்பது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ஹவாலா தடுப்பு சட்டத்தின் கீழ், அசன் அலி புனேயில் கைது செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றம் தலையிட்டதன் பேரில் அசன் அலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணையில் அவர் பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன் ஆகிய 4 நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தவிருப்பதாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications