முன்னாள் தி்முக அமைச்சர் கேபிபி சாமி மீது மேலும் 4 வழக்குகள்
சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி. சாமி மீது மேலும் நான்கு வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் கே.வி கே குப்பத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற மீனவர் கடந்த 2006ம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்டார். அவரை புதுச்சேரி அருகே கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் சாமி, அவரது தம்பிகள் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் சாமியின் தம்பிகள் இருவர் உள்பட 6 பேரை முதலில் போலீஸார் கைது செய்தனர். சமீபத்தில் சாமியும் கைது செய்யப்பட்டார்.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீஸார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது சாமி மீது நடிகர் பரணிகுமார் என்பவரைத் தாக்கியது, மீனவர் வேலுவை சாமி தரப்பு கடத்தியதாக ஒரு வழக்கு உள்பட மேலும் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அதேபோல ஒரு நில மோசடி வழக்கும் சாமி மீது பதிவாகியுள்ளது. இதையடுத்து சாமி மீதான வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications