திருமங்கலத்தில் சிபிஎம் வேட்பாளர் முத்துக்காளை மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

திருமங்கலம்: தே.மு.தி.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமங்கலம் வேட்பாளர் முத்துக்காளை நகர்மன்ற தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கேட்ட இடம் கிடைக்காதாதல், அ.தி.மு.க. கூட்டணியில் வெளியேறி தே.மு.தி.க. கூட்டணியில் இணைந்தது. ஏற்கனவே, திருமங்கலம் நகரசபை தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் எம். பாரத் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்துக்காளை போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்தது.

அதன்பேரில் திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலர் முகமது சிராஜிடம், வேட்பாளர் முத்துக்காளை தாக்கல் செய்தார். அப்போது தே.மு.தி.க. நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+