இந்தியாவை சமாளிக்கத் தான் ஹக்கானி அமைப்பிற்கு பாக். ஆதரவு: முஷாரப் பேட்டி
லண்டன்: ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பப் பார்க்கிறது இந்தியா. எனவே, அதை சமாளிக்கத் தான் பாகிஸ்தான், ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்து வருகிறது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
ஹக்கானி தீவிரவாத அமைப்பு தொடர்பாக பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும், ஹக்கானி தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு உள்ளது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகினார். அமெரிக்கா எங்களைக் குற்றம் கூறுகிறது. ஆனால் அமெரி்ககாவின் சிஐஏவுக்கும் உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது. ஏன், ஹக்கானி அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டாலும் அதை துவக்கி, ஊக்குவித்து வருவது சிஐஏ தான். சிஐஏவின் செல்லப்பிள்ளை ஹக்கானி அமைப்பு என்று அமெரிக்கா மீது பதிலுக்கு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கும், ஹக்கானி அமைப்புக்கும் தொடர்பு உண்டு என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் பதவியில் இருந்தால் பாகிஸ்தானை எவ்வாறு காப்பாற்றுவது என்று தான் யோசித்திருப்பேன். இந்தியா, ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்ப முயலும் போது, நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாக்கத் தான் நினைப்போம்.
வடக்கு வசிரிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹக்கானி அமைப்புக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications