இந்தோனேசியாவின் மலைக்கிராமத்தில் விமான விபத்து: 18 பேர் பலி?
மெடான்(இந்தோனேசியா): மேற்கு இந்தோனேசியாவில் 18 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று மலைக்கிராமத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் பயணித்த அனைவருமே இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது என்று அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிஏஎஸ்ஏ சி- 212 என்னும் சிறிய ரக விமானம் இன்று காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் இருந்து அசே மாகாணத்திற்கு புறப்பட்டது. அதில் 3 பணியாளர்கள் 15 பயணிகள் உள்பட 18 பேர் பயணித்தனர். மலைக் கிராமமான பஹோரக்கில் சென்று கொண்டிருக்கையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 18 பேருமே உயிர் இழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மலைப் பகுதி என்பதாலும், கனமழை பெய்வதாலும் மீட்புப் பணி தடைபட்டுள்ளது.
அண்மைக் காலமாக இந்தோனேசியாவில் விமான விபத்து, ரயில் விபத்து, படகு விபத்து என்று ஒரே விபத்து மயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications