திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: களத்தில் பரஞ்சோதி, நேரு உள்பட 16 பேர்
திருச்சி: திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலில் 16 பேர் களத்தில் உள்ளனர்.
திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர மேலும் 14 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் 16 பேர் களத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் களம் இறங்கிய அதிமுக வேட்பாளர் மரியம் பிச்சை 7,179 வாக்குகள் வித்தியாசத்தில் தான் நேருவைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.6.68 லட்சம் பறிமுதல்:
இந் நிலையில் திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ. 6.68 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது வாக்காளர்களுக்குத் தருவதற்காக வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications