ரிமோட் கன்ரோல் விமானம் மூலம் பென்டகன் மீது தாக்குதல் நடத்த முயன்ற யுஎஸ் இளைஞர் கைது
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமை அலுவலமான பென்டகன் மீது ரிமோட் கன்ரோலில் இயங்கும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட வாலிபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் நகரில், அந்நாட்டு ராணுவ தலைமை அலுவலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலம் மீது அல்-கொய்தா தீவரவாதிகள் விமானத்தை மோதி தகர்த்தனர். இந்த தாக்கல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தாண்டு மிக பெரிய அளவில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதற்கான ரகசிய விசாரணையில் உளவுத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். பாஸ்டன் பகுதியில் ரிமோட் கன்ரோல் விமானங்களை தயாரிக்க தேவையான, கட்டமைப்புகளை கொண்ட பகுதியை வாடகைக்கு தேடி வந்த வாலிபர் ஒருவர் உளவுத் துறை போலீசாரிடம் சிக்கனார்.
நார்த் ஈஸ்டன் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்ற ரிஸ்வான் பெர்டாஸ் என்ற வாலிபரை பிடித்து விசாரித்த போது, பென்டகன் மீது ரிமோட் கன்ட்ரோல் விமானங்களை மோதவிட்டு இழப்பை ஏற்படுத்த சதி திட்டமிட்டிருப்பது தெரிந்தது.
அவரது தங்குமிடத்தை சோதனையிட்ட போது, ரிமோட் கன்ட்ரோல் விமானம் உருவாக்கத்திற்கான மாதிரிகள் சிக்கியது. விசாரணையில் ரிஸ்வான் பெர்டாஸ்சிற்கு, அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது தெரிந்தது.
இவர் தயாரித்து கொடுத்த மொபைல்போன் குண்டுகள் மூலம் 8 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் கிடைத்தது. இதேபோல 8 மொபைல்போன் குண்டுகளை அல்-கொய்தாவிற்கு செய்து கொடுத்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக வாஷிங்டன் பகுதியில் சென்று தனது ரிமோட் கன்ரோல் விமானங்களை உருவாக்க இடம் தேடியுள்ளார். ஆனால் அங்கு அதற்கான அனுமதி கிடைக்காத நிலையில் பாஸ்டனை தேர்வு செய்துள்ளார். பாஸ்டன் பகுதியில் அமெரிக்கராக வாழ்ந்த வந்த ரிஸ்வான் அமெரிக்காவை தகர்க்க திட்டமிட்டதாக வெளியான செய்தியை, கேள்விப்பட்ட அவரது சுற்றத்தாரால் இதை நம்பவே முடியவில்லை.












Click it and Unblock the Notifications