15ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு: கனிமொழி ஜாமீன் மனு மீது 17ம் தேதி விசாரணை

Subscribe to Oneindia Tamil

Kanimozhi
டெல்லி: திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கலைஞர் டி.விக்கு ரூ.200 கோடி கைமாறிய குற்றச்சாட்டின் பேரில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆ.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு லஞ்சமாக இந்தத் தொகையை வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இது கடனாக வாங்கப்பட்ட பணம் என்றும், இதை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறி வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனிமொழியும், சரத்குமாரும் தாக்கல் செய்த மனுக்களை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை நிராகரித்து விட்டன.

ஜாமீனை நிராகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கையில், சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்பு அதே நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறியிருந்தது.

ஆனால் குற்றச்சாட்டு பதிவு செய்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 5 மாதங்களாக கனிமொழியும் சரத்குமாரும் திகார் சிறையிலேயே உள்ளனர்.

இந் நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்தனர். இதற்கு சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பிறகே ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால், அதற்கு முன் இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ கூறியது.

இந் நிலையில் இந்த ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறும் என சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ வழக்கறிஞரும் கனிமொழி, சரத்குமாரின் வழக்கறிஞர்களும் இதை வேறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கோரினர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், 17ம் தேதி தேதி கனிமொழி, மற்றும் சரத்குமாரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்பு கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதால் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+