கரூர் நகர சபை தலைவர் பதவி- தேமுதிக வேட்பாளர் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் நகர சபை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்
என்.எஸ்.கே.வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வரும் 17ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான
வேட்புமனு கடந்த 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை
நடந்தது.

நகராட்சி தலைவர் பதவிக்கு 21 பேரும், 48 வார்டுகளின் கவுன்சிலர்கள் பதவிக்கு 358
பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். கரூர் நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர்
மைவிழிசெல்வி மனுக்களை பரிசீலனை செய்தார்.

அப்போது தே.மு.தி.க. சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த
என்.எஸ். கிருஷ்ணனின், வேட்பு மனுவில் வார்டு எண், வாக்காளர் எண் மற்றும் வார்டு எண்கள்
குறித்த விபரங்கள் முறையாக இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தி.மு.க. வேட்பாளர் ரவி, அ.தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ், காங்கிரஸ் வேட்பாளர்
சுப்ரமணியன், ம.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி உள்பட 20 பேரின் மனுக்கள் ஏற்றுக்
கொள்ளப்பட்டது. அதேபோல 48 வார்டுகளின் கவுன்சிலர்கள் பதவிக்கான, 358 மனுக்களில் 7
பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மீதமுள்ள 351 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தே.மு.தி.க. சார்பாக மாவட்டம் வேட்பு மனு தாக்கல் செய்த பலரது மனு ஏற்கப்பட்ட
நிலையில், மாவட்ட செயலாளராக உள்ள ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவம்
தே.மு.தி.க. கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+