ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்திய
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்கல், தூப்பாக்கி சூடு, மிரட்டி
பொருட்களை பறித்து செல்லுதல் போன்ற பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றது.
இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 400 படகுகளில் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக்
கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மிரட்டியும் கல்வீசியும்
தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ, எடிசன் ஆகியோரது
விசைப்படகுகள் கடும் சேதமடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல்
பாதியிலேயே கரை திரும்பினர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி
தாக்குதல் நடத்திய சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+