தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திமுக வேட்பாளர் காட்டுராஜா நில அபகரிப்பு புகாரில்கைது
ஆத்தூர் : தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரசிங்கபுரம் நகராட்சி துணைத் தலைவரும், திமுக வேட்பாளருமான காட்டுராஜா நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நரசிங்கபுரம் நகராட்சி தி.மு.க. துணைத் தலைவராக இருந்தவர் காட்டுராஜா என்ற பழனிச்சாமி. இவர் தற்போது அநே நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி(60) என்ற பெண், தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை கடந்த 2004 ம் ஆண்டு, காட்டுராஜா, அவரது மனைவி செல்வி, வேலவன் ஆகியோர் மிரட்டி நிலத்தை அபகரித்துதாக சேலம் நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த புகாரின் பேரில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரசிங்கபுரம் நகராட்சி துணைத் தலைவரும், திமுக வேட்பாளருமான காட்டுராஜா கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications