நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி

டெல்லியில் நடந்து வந்த 2 நாள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் முடிவடைந்துள்ளது. இக்கூட்டத்தில் அத்வானி பேசுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஅரசு தொடர்ந்து பல இமாலயத் தவறுகளை இழைத்து வருகிறது. இதை மக்கள் மத்தியில் பாஜகவினர் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த ஆட்சிக்கும், காங்கிரஸுக்கும் பெரும் சிக்கல்கள், நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த அரசு தற்கொலைப் பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. நாம் அதை எதுவும் செய்ய வேண்டியதில்லை. மாறாகஅதுவே வீழ்ந்து விடும். இந்த அரசு பதவியில் நீடிக்க எந்தவிதமான அருகதையும் இல்லை.
இந்த நிலைமை காரணமாக விரைவில் லோக்சபாவுக்கு இடைத்தேர்தலை எதிர்பார்க்கலாம். அதற்கு பாஜகவினரும்,மக்களும் தயாராக இருக்க வேண்டும் என்றார் அத்வானி.
சுஷ்மா சுவராஜ் பேசுகையில், காங்கிரஸின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்பிக்க வேண்டும். நம்மிடம் சுத்தமான இமேஜ் இருக்க வேண்டும். நாம் தூய்மையானவர்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும். கட்சிக்குள் ஒற்றுமை வலுக்க வேண்டும். கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications