தொழிற்கூடங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தராதீர்கள்- மமதா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Mamata Banerjee
கொல்கத்தா: தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை அமைக்க அதிகாரிகளுக்கு யாரும் லஞ்சம் தரத் தேவையில்லை, தராதீர்கள் என்று தொழிலதிபர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,மேற்கு வங்கத்தில் தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் அமைக்க தொழிலதிபர்கள், நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க எனது அரசு ஆர்வமாக உள்ளது.

தொழிற்சாலைகளை அமைக்க யாரும், யாருக்கும் லஞ்சம் தரத் தேவையில்லை. இதுபோன்ற சமயங்களில், சிக்கல்களை சந்திப்போர் உடனடியாக காவல்துறையினரை நாடினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். மாறாக, லஞ்சம் தர முனையாதீர்கள். லஞ்சம் கேட்போர் குறித்து நீங்கள் எங்களுக்குத் தரும் தகவல்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும், உங்களது அடையாளம் பாதுகாக்கப்படும். விரைவான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார் மமதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+