கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி-சுற்றுலா பயணிகள் ரசித்தனர்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலோரத்தில் உள்ள காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழுந்தது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 2-ம் தேதி (இன்று)ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின் அவரது அஸ்தியின் ஒரு பகுதி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. அதற்கு முன்பாக அந்த அஸ்தி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அந்த இடம் காந்தி மண்டபம் அழைக்கப்படுகிறது. காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளான இன்று (அக்.2-ம் தேதி) சூரிய ஒளி விழும். இந்த நிகழ்ச்சி பகல் 12 மணியளவில் நடந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர்.












Click it and Unblock the Notifications