குஜராத் வளர்ச்சியைப் பார்த்து காங்கிரஸுக்கு வயித்தெறிச்சல்: மோடி

மகாத்மா காந்தியின் பிறப்பிடமான போர்பந்தரில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "குஜராத் மாநில ஆளுநர் கமலா பெனிவால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் கையெழு்ததிட மறுக்கிறார். இதே போன்று ஆயிரக் கணக்கான நடுத்தர மக்களுக்கு பயன்படும் ஒரு மசோதாவையும் திருப்பி அனுப்பிவிட்டார். சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டினால் பெரும்தொகையை அபராதமாக விதிக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் ஆளுநர் அந்த மசோதாவிலும் கையெழுத்திடவில்லை.
இந்த மசோதா மட்டும் நிறைவேறியிருந்தால் நடுத்தர மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.
காங்கிரஸார் அதிலும் குறிப்பாக மத்திய அரசுக்கு குஜராத்தின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமை. குஜராத்தின் எதிரிகள் யார் என்பதை மக்கள் கண்டுகொள்ள வேண்டும். மத்திய அரசு குஜராத்தோடு போட்டி போட்டு முன்னேறுவதை நம்மை மீது ஏதாவது குற்றம் கூறுகிறது," என்றார்.
தான் எழுதிய பிரேம்தீர்த் என்ற புத்தகத்தின் பிரெய்லி பதி்ப்பை அந்த நிகழ்ச்சியின்போது வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications