சீனாவை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வேகமாக வளர்கிறது இந்தியா- துபாய் மாநாட்டில் மொய்லி

Subscribe to Oneindia Tamil

Veerappa Moily
துபாய் : உலகின் எதிர்காலமே இனி இந்தியாதான். வரும் நாட்களில் சீனாவையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அமையப் போகிறது என மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

துபாயில் நடந்த இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கவுன்சில் ( Indian Business and Professional Council) மாநாட்டில் நேற்று பங்கேற்ற அவர் பேசியது:

"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இப்போது 8.5 சதவீதமாக உள்ளது. விரைவில் இது 10 சதவீதமாக உயரும் வாய்ப்பு உள்ளது. அடுத்த மூன்றே ஆண்டுகளில் இந்த வேக வளர்ச்சி சாத்தியமாகிவிடும். சீனாவை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் இந்த வளர்ச்சி அமையும்.

இந்தியாவின் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வரும் 2030-ல் உலகின் சூப்பர் பவர் இந்தியாதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அத்தனை வல்லரசுகளும் ஒப்புக் கொண்ட உண்மை இது.

விரைவில் புதிய பொருளாதாரக் கொள்கை மத்திய அமைச்சரவையின் அனுமதிக்குப் பிறகு வெளியிடப்பட இருக்கிறது. இது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுதந்திரமான முதலீடு, பங்குதாரர்களுக்கு இணக்கமான முதலீட்டுச் சூழல், அதே நேரம் அரசின் பாதுகாப்பான கண்காணிப்பு என பலவித சிறப்பம்சங்களைக் கொண்டதாக இந்த புதிய பொருளாதாரக் கொள்கை அமையும்.

அரசுத் துறை நிறுவனங்களில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கப் போகும் இந்த புதிய பொருளாதாரக் கொள்கையை அடுத்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட உள்ளது. டிசம்பரில் இதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துவிடும் என நம்புகிறேன். இந்த புதிய கொள்கை அனைத்து அமைச்சகங்களுக்குமே ஒரு வழிகாட்டியாக அமையும்.

இந்தியாவில் பல்வேறு அமைச்சகங்களும் ரூ 11 ஆயிரம் பில்லியன் அளவுக்கு கொள்முதல் செய்கின்றன. இதில் நிறைய பேர சர்ச்சைகள், அதிகார பகிர்வின்மை சர்ச்சைகள் உள்ளன. இவற்றைக் களைய நாம் நீண்டதூரம் போக வேண்டியுள்ளது. இதற்காகவே, இந்தியாவில் ஒரு தேசிய சந்தை அமைக்கும் முயற்சி நடந்துவருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட் மிகச் சிறப்பான நாடு. அமீரக ஆட்சியாளர்களின் தூர நோக்குப் பார்வை போற்றத்தக்கது. இங்குவாழும் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வெளியிலிருந்து இந்தியாவுக்காக பாடுபடுகின்றனர். அந்தவகையில் அவர்கள்தான் இந்தியாவின் நிஜமான தூதர்கள், " என்றார்.

கன்னடர்கள் சங்கம் வரவேற்பு

முன்னதாக அவருக்கும் அவர் மனைவி மாலதி மொய்லிக்கும் துபாயில் வாழும் கன்னடர்களின் தேவடிகா சங்கத்தின் (Devadiga Sangha) சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கர்நாடகத்தைச் சேர்ந்த துபாய் வாழ் தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+