எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பு: தம்பிதுரை
கரூர்: அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமிக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ள தொடர்பு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என, கரூர் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் கொங்கு திருமண மண்டப்பத்தில் அ.தி.மு.க., சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கரூர் எம்.பி. தம்பிதுரை கலந்து கொண்டு பேசியதாவது, கரூர் எம்.பி.தொகுதியில், 1989 பிறகு தான், அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
அதன்பிறகு, அ.தி.மு.க.வின் கோட்டையாக கரூர் உள்ளது. இடையில் ஒருமுறை மட்டும் மணல் கொள்ளை அடித்த கே.சி.பழனிசாமி தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார். தற்போது சிறையில் உள்ள கே.சி.பழனிசாமிக்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ள தொடர்பு பற்றிய தகவல் விரைவில் வெளிவரும்.
அப்போது, திஹார் சிறையில் உள்ள முன்னாள் மத்தியமைச்சர் ராஜாவுக்கும், கே.சி.பழனிசாமிக்கும் இருந்த தொடர்பு குறித்து தெரியவரும். ராஜா, கனிமொழி அடுத்து மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி ஆகியோரும் சிறைக்கு செல்லப் போகின்றனர். கருணாநிதியுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், அனைவரும் ஒரு நாளாவது சிறைக்குச் செல்ல வேண்டிய தருணம் வரும், என்றார்.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. காமராஜ் , கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் அதிமுக வேட்பாளர் தமிழ்நாடு செல்வம், கரூர் மாவட்ட அதிமு பொருளாளர் பி.கே.எஸ்.முரளி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications