மணல் கொள்ளையைத் தடுத்த நல்லகண்ணுவை வீட்டைக் காலி செய்ய சொல்லி வி்ட்டனர்- நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

Nanjil Sampath
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுத்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவை வீட்டைக் காலி செய்யச் சொல்லி விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.

நெல்லையில் நடந்த மதிமுக மேயர் வேட்பாளர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார் நாஞ்சில் சம்பத்.

அப்போது அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை. மணல் கொள்ளை நிற்கவில்லை. மணல் கொள்ளையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த நல்லகண்ணுவை வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டனர். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக காணாமல் போகும்.

ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகம் என்ற கொள்கையோடு மதிமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது.

மாநகராட்சியில் நல்ல நிர்வாகம் அமைய ஓய்வுபெற்ற அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும். இன்று ஊழல் என்ற பூதம் இந்தியாவை ஆட்டி படைக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. டிவி பார்க்க முடியவில்லை. 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

கூடங்குளம் அணுமின்நிலையம் தேவை என்பதை நியாயப்படுத்துவதற்காக, தமிழக அரசு மின்வெட்டை அதிகரிப்பது போல் தெரிகிறது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+