இன்னும் 10 நாளில் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

Dayanidhi Maran
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்னும் 10 நாட்களில் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ தரப்பி்ல் கூறுகையில், 2ஜி விவகாரத்தில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை முடிவடைந்து விட்டது. இன்னும் 10 நாட்களில் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்படும். இதுதொடர்பாக சிபிஐ உயர் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்று அத்தகவல்கள் கூறுகின்றன.

செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வக்கீல் கூறுகையில்,தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இருப்பதாகவும், அவர் மீது விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் கூறியது.

ஏர் செல் விவகாரத்தில்தான் தயாநிதி மாறன் வலுவாக சிக்கியிருக்கிறார். ஏர் செல் நிறுவனத்தை சிவசங்கரன் வைத்திருந்தபோது 2ஜி உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தது ஏர்செல். ஆனால் அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வந்தார் தயாநிதி மாறன். மேலும், ஏர் செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திடம் விற்குமாறு சிவசங்கரனை மாறன் நிர்ப்பந்தப்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு. அதன்படி ஏர்செல் விற்கப்பட்டவுடன், மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு உடனடியாக உரிமங்களை அள்ளி வழங்கினார் மாறன் என்பது இன்னொரு குற்றச்சாட்டு.

இதற்குப் பிரதியுபகாரமாக மேக்ஸிஸ் நிறுவனம் சன் டைரக்ட் சேவையில் பெரும் பண முதலீடு செய்ததாதக இன்னொரு குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களில் தயாநிதி மாறன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவுள்ளதால் அவர் விரைவில் கைதாகும் சூழல் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+