நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கிறது. தமிழக விவசாயிகள் நஷ்டமடையாத வகையில் தமிழக அரசு அதை உயர்த்தி வழங்கி வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு மூலம் 2011-2012ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலை கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதில் சாதாரண நெல் (குவிண்டாலுக்கு) - 1080 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் 50 ரூபாய் சேர்த்து 1130 ரூபாயாக வழங்கப்படுகிறது.
அதேபோல கிரேடு 'ஏ' ரகம் (குவிண்டாலுக்கு) 1110 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்தது. அதற்கு தமிழக அரசு 70 ரூபாய் சேர்த்து 1180 ரூபாய் என வழங்கப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு கடந்தாண்டை விட குவிண்டால் ஒன்றுக்கு 80 ரூபாய் கூடுதலாக பெறும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications