பன்றிக்கு வைத்த சுருக்கில் சிக்கிய சிறுத்தை பரிதாப பலி-கம்பியை வைத்தவர் கைது

நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட குமரன் நகரைச் சுற்றிலும் காப்பு காடுகளும் தேயிலை தோட்டங்களும் காணப்படுகின்றன. இந்த காடுகளில் வசிக்கும் காட்டு பன்றிகள், காட்டு எருமைகள், சிறுத்தை புலிகள் உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது குமரன் நகருக்குள் எட்டிப்பார்ப்பது வாடிக்கை.
இந்த நிலையில் நேற்று காலையில் டேவிட் என்பவரின் வீட்டருகே சிறுத்தைப்புலி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை ஒன்று மரத்தில் தொங்கியவாறு உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்தது. உடனடியாக இது குறித்து குமரன் நகரைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் சிறுத்தைப்புலி உயிரிழந்து விட்டது.
இதனையடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் ஏணி வைத்து ஏறி இறந்த சிறுத்தை புலியின் உடலை மீட்டு கீழே இறக்கினர். சிறுத்தை புலியை ஆய்வு செய்த நீலகிரி வடக்குப்பகுதியைச்சேர்ந்த வனத்துறை அதிகாரி எஸ். ராமசுப்பிரமணியன், காட்டுபன்றியை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட சுருக்குக்கம்பியில் சிக்கி ஒரு வயது பெண் சிறுத்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுத்தைப்புலி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்த பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (48) என்பவர் காட்டு பன்றியை பிடிக்க சுருக்கு கம்பி வைத்துள்ளதும், அதில் சிறுத்தை புலி சிக்கி இறந்து இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் சுருக்கு வைத்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மரத்தில் தொங்கியவாறு இறந்துகிடந்த சிறுத்தையைக் காண கிராமத்தினர் அனைவரும் திரண்டதால் குமரன் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications