பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை தேவை- தலித் பாண்டியன்
கரூர்: பரமக்குடியில் தலித் மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தலித் வன்கொடுமை தடுப்பு பிராச்சரா மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கோரிக்கை விடுத்த்துள்ளார்.
பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்ததது. ஆனால் இதை தலித் அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கலவர சம்பவத்திற்கு உண்மையான காரணத்தை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தலித் சேனா அமைப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் இந்திய குடியரசு தலைவரிடம் மனு அளித்தார்.
இந்நிலையில், சி.பி.ஐ. விசாரணை கோரி கரூர் தாலுக்கா அலுவலம் முன்பு தலித் வன்கொடுமை தடுப்பு பிரச்சார இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது அதன் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் பேசுகையில், இந்த கலவர சம்பவம் தி்ட்டமிட்ட சதி. இந்த கலவரத்திற்கு உண்மையான காரணத்தை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் தியாகி இமானுவேல்சேகரன் பேரவை பொதுச் செயலாளர் சந்திரபோஸ், வழக்கறிஞர் ஜீவானந்தம், தமிழக முன்னேற்றக் கழக கரூர் மாவட்ட தலைவர் சக்திவேல், கிராம தொழிலாளர் முன்னணி செயலாளர் கவிதா, புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications