'வறுமைக்கோட்டுக்கு' புதிய அளவுகோல்.... - மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, உணவு பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் யார்? என்பதை வரையறை செய்வதில் குழப்பம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, உச்சநமீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மத்திய திட்டக் குழு சார்பில் பிரமாண பத்திரம் ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில் நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.32-ம் (5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.4824), கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.26-க்குள்ளும் (5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.3905) செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு
திட்டக் குழுவின் இந்த விளக்கத்துக்கு, அரசு தரப்பு உள்பட நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மராட்டிய மாநில பழங்குடியினப் பெண்கள், குறிப்பிட்ட இந்த தொகைக்கு ஏற்ப நீங்கள் குடும்பம் நடத்த முடியுமா? என்று கேட்டு, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காசோலை ஒன்றை அனுப்பி, வித்தியாசமான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்கள் அருணா ராய், என்.சி.சக்சேனா ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து வந்தவுடன் நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் இந்த விவகாரம் குறித்து திட்ட கமிஷனின் நிலைப்பாடு குறித்து திங்கட்கிழமை (நேற்று) அறிக்கை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அலுவாலியாவை நேற்று சந்தித்துப் பேசினார். கூட்டத்தின் முடிவில் நிருபர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், இந்த விவகாரத்துக்கு தாங்கள் சுமுக தீர்வு கண்டுவிட்டதாக தெரிவித்தார்.
வறுமைக்கோட்டுக்கு புதிய அளவுகோல்
நேற்று மாலை, அலுவாலியாவும், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, "ஏழைகளுக்கான பல்வேறு நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்களை பெறுவதற்கான வறுமைக்கோடு அளவுகோல், புதிய முறையில் நிர்ணயம் செய்யப்படும். சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரி-பொருளாதார கணக்கெடுப்பு கிராமப்புறங்களில் வீடு, வீடாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இந்த கணக்கெடுப்பு முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
வறுமைக்கோடு அளவுகோல் தொடர்பான புதிய முறை, இந்த சட்ட விதிகளுக்கு முரண்படாமல் இருப்பதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கிடுவதில் உள்ள பலவீனங்கள், புதிய கணக்கெடுப்புக்கு ஏற்ப சரி செய்து திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதே நேரம் டெண்டுல்கர் கமிட்டியின் பரிந்துரைகளை ஒரு முக்கிய கையேடாக இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுத்துக் கொள்ளும்'', என்றனர்.
40 கோடி பேர்
திட்ட குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த பிரமாண பத்திரத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications