இந்திய-பாக். எல்லையில் ரூ. 135 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: பாகிஸ்தானியர்கள் தப்பியோட்டம்

இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் பவன் சவுத்ரி பிடிஐ-க்கு கூறியதாவது,
நேற்று முன்தினம் இரவு எல்லைப் பாதுகாப்பு படையின் ரோந்துப் படை இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி அருகே ரோந்தில் இருந்தது. அப்போது ரூ. 135 கோடி மதிப்பிலான 27 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் கடத்த முயன்றனர். அதை ரோந்துப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த ஆண்டு இவ்வளவு அதிக மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது இது தான் முதல் தடவை.
போதைப் பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர்களை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படையினர் சுடத் தொடங்கியவுடன் அவர்கள் போதைப் பொருளை போட்டுவிட்டு பாகிஸ்தானுக்குள் ஓடிவிட்டனர் என்றார்.
கடந்த 4ம் தேதி ரூ. 75 கோடி மதிப்பிலான 15 கிலோ ஹெராயின் போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications